என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புரோ கபடி லீக்: 14-வது தோல்வியை பதிவுசெய்தது தமிழ் தலைவாஸ்
Byமாலை மலர்13 Oct 2017 7:55 PM GMT (Updated: 13 Oct 2017 7:55 PM GMT)
புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 34-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
சென்னை:
5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, நேற்று புனே சுற்று ஆட்டங்கள் தொடங்கின.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ் தலைவாஸ் அணி, இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இப்போட்டியில் முதல் பாதியின் 18-14 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டின.
இருப்பினும் முடிவில் 34-30 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 14 தொடுபுள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், ஒரே சிசனில் 200 புள்ளிகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார். தமிழ் தலைவாஸ் அணி, 14-வது போட்டியில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் - குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 44-20 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சுகேஷ் ஹெக்தே அதிகபட்சமாக 15 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி 82 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், புனேரி பால்டன் அணி 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி 74 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 41 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.
இன்று (14-ம் தேதி), நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - யூ மும்பா, தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X