search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னுடைய சாதனைகள் 15 முதல் 20 வருடங்கள் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்
    X

    என்னுடைய சாதனைகள் 15 முதல் 20 வருடங்கள் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்

    என்னுடைய சாதனைகள் இன்னும் 15 முதல் 20 வருடங்கள் வரை நிலைத்திருக்கும் என ஓட்டப் பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
    ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் உலகின் அதிகவேக மனிதன் என்ற பெருமையை பெற்றவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்று சாதனைப் படைத்தவர்.

    மேலும் 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற தொடரில் 100 மீட்டரை 9.58 வினாடிகளிலும், 200 மீட்டரை 19.19 வினாடிகளிலும் கடந்து சாதனைப் படைத்தவர். இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை.



    இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாரும் நெருங்க முடியாத நிலையில், தன்னுடைய சாதனையை முறியடிக்க இன்னும் 15 முதல் 20 வருடங்கள் வரை ஆகும் என உசைன் போல்ட் கூறியுள்ளார்.

    இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில் யோகன் பிளேக், ஜஸ்டின் காட்லின் மற்றும் அசஃபா பாவெல் ஆகியோர் தடகளத்தில் மிகச்சிறந்த ஜாம்பவான்கள். என்னுடைய சாதனைகள் உடைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றால், இந்த காலக்கட்டத்தில் உடைத்திருக்க வேண்டும்.



    ஆகவே, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் என்னுடைய சாதனைகள் நிலைத்திருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×