என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இன்றைய பயிற்சி ஆட்டத்தில் யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆடவில்லை
இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டி தொடங்க இன்னும் 3 தினங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும், பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்தியா மோதும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களான யுவராஜ்சிங், ரோகித் சர்மா ஆடவில்லை. வைரஸ் காயச்சல் காரணமாக யுவராஜ் சிங்கும், அணியுடன் இணைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரோகித் சர்மாவும் இடம்பெறவில்லை.
காயத்தில் இருந்து குணமடைந்த அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் உடல் தகுதியை இந்த பயிற்சி ஆட்டத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 30-ந்தேதி எதிர்கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்