என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கங்கை கால்வாய்க்குள் கார் பாய்ந்து குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
Byமாலை மலர்26 May 2019 12:04 AM GMT (Updated: 26 May 2019 12:04 AM GMT)
உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை கால்வாய்க்குள் கார் ஒன்று விழுந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த ஜத்புரா என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த கார் ஒன்று அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்று கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று காரில் இருந்து 5 பேரை மீட்டனர். அதில் இருந்த மற்ற 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அந்த காரில் குருகிராமில் இருந்து ஹரித்துவாருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கால்வாய்க்குள் பாய்ந்ததில் அதில் இருந்த சந்தீப் குப்தா(வயது 30), ரிங்கி(25), அனுஷா குப்தா(8), அசுதோஷ் குப்தா(5) மற்றும் டிரைவர் விக்கி ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட 5 பேரும் பெண்கள் ஆவார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த ஜத்புரா என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த கார் ஒன்று அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்று கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று காரில் இருந்து 5 பேரை மீட்டனர். அதில் இருந்த மற்ற 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அந்த காரில் குருகிராமில் இருந்து ஹரித்துவாருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கால்வாய்க்குள் பாய்ந்ததில் அதில் இருந்த சந்தீப் குப்தா(வயது 30), ரிங்கி(25), அனுஷா குப்தா(8), அசுதோஷ் குப்தா(5) மற்றும் டிரைவர் விக்கி ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட 5 பேரும் பெண்கள் ஆவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X