என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: ஷீலா தீட்சித்
Byமாலை மலர்21 April 2019 3:52 AM GMT (Updated: 21 April 2019 4:20 AM GMT)
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #Election2019
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவை தொகுதி உள்ளன. இங்கு 6-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை.
அடுத்த மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23-ந்தேதிதான் கடைசி நாள். இந்நிலையில் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
7 தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசிய அவர், ‘‘அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை நாளைக்குள் அறிவிக்கும். நான் சாந்த்னி சவுக் தொகுதியில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றார்.
இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.
அடுத்த மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 23-ந்தேதிதான் கடைசி நாள். இந்நிலையில் நாளைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
7 தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசிய அவர், ‘‘அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை நாளைக்குள் அறிவிக்கும். நான் சாந்த்னி சவுக் தொகுதியில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்’’ என்றார்.
இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X