search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். #BJP #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைமைக்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்...” என்று அவர் கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில், சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, சுமார் 10 ஆயிரம் காவலாளிகள் போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில், “காவலாளிகளுக்கு பின்னால் மறைந்து கொள்ளும் மோடிக்கு காவலாளிகள் குறித்து கவலை இல்லை. இப்போதாவது அவர்களை பற்றி அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.  #BJP #Congress #RahulGandhi 
    Next Story
    ×