search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீனா போரா கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை- இந்திராணியின் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ
    X

    ஷீனா போரா கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை- இந்திராணியின் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ

    ஷீனா போரா கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற இந்திராணி முகர்ஜியின் கோரிக்கையை சிபிஐ நிராகரித்தது. #SheenaBora #CBI
    புதுடெல்லி:

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி, தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.


    இந்நிலையில், முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதிக்க கோரி மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார். அதில், 2015ம் ஆண்டு கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் உண்மை கண்டறியும் சோதனை (பாலிகிராப்) நடத்த மறுப்பு தெரிவித்ததாகவும், தற்போது தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மனுவிற்கு சிபிஐ தரப்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்திராணி முகர்ஜியின் கோரிக்கையை நிராகரித்த சிபிஐ, வழக்கின் விசாரணை தொடங்கிய காலத்தில் இந்திராணியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மதம் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டதாகவும், இப்போது சோதனை நடத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் கூறியுள்ளது. #SheenaBora #CBI
    Next Story
    ×