search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபோது தீ விபத்து-  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
    X

    நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபோது தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

    பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். #BiharFireAccident
    பாகல்பூர்:

    பீகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டம், ஸ்ரீபூர் கிராமத்தில், சதீஸ் சிங் என்பவரின் வீடு நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. குளிர்காய்வதற்காக தீ மூட்டியபோது, அதில் இருந்த தீப்பொறி சதீஸ் சிங்கின் வீட்டில் பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவியதால், வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் கிருஷ்ண குமார் (10), கிரந்தி குமார்(8), ஷைலஜா குமாரி(6), பூஷா குமாரி(4) ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சதீஸின் சகோதரர் மற்றும் தாயார் கருணா தேவி(50) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகல்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கருணாதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சதீஸ் சிங்கின் வீட்டில் பற்றிய தீ, அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் 7 வீடுகள் தீயில் கருகின. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BiharFireAccident

    Next Story
    ×