என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Byமாலை மலர்17 Jan 2019 1:12 AM GMT (Updated: 17 Jan 2019 1:12 AM GMT)
தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #CentralUniversity #Cabinet
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.
பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.
பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X