search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் நக்சலைட்களால் கொல்லப்பட்ட தொலைக்காட்சி கேமராமேன் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு
    X

    சத்தீஸ்கரில் நக்சலைட்களால் கொல்லப்பட்ட தொலைக்காட்சி கேமராமேன் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு பெற்றோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    புவனேஸ்வர்:

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமராமேன் அச்சுத்யானந்த் சாஹு(34) என்பவர் அப்பகுதியில் கடந்த 30-10-2018 அன்று துணை ராணுவப் படையினரை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் நகரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடி இங்கு அச்சுத்யானந்த் சாஹுவிப் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். #Modi #Doordarshancameraman #AchutyanandSahu
    Next Story
    ×