search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ விபத்து - 10  ரெயில்கள் நிறுத்தம்
    X

    மகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ விபத்து - 10 ரெயில்கள் நிறுத்தம்

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில், 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. #GoodsTrainFire
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தகானு அருகே நேற்று இரவு ஒரு சரக்கு ரெயில் வந்துகொண்டிருந்தது. தகானு சாலை, வங்கான் ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் வந்தபோது, ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. இதில் 2 பெட்டிகள் கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்த பாதையில் இரு புறங்களிலும் செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நள்ளிரவு 2 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.



    உயர்அழுத்த மின் கம்பிகள் தீயில் கருகியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே, அந்த பாதையில் செல்லக்கூடிய 10 நீண்டதூர ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    அதன்பின்னர் சீரமைப்பு பணி தொடங்கியது. தீப்பிடித்த ரெயில் பெட்டிகளை அகற்றிவிட்டு, தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மின்வயர்களை மாற்றும் பணியும் நடைபெறுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #GoodsTrainFire
    Next Story
    ×