search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகில் எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது - மத்திய மந்திரி திட்டவட்டம்
    X

    உலகில் எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது - மத்திய மந்திரி திட்டவட்டம்

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் மற்றும் உ.பி. துணை முதல் மந்திரி கேஷவ் புரசாத் மவுரியா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #Ramtempleconstruction #AyodhyaRamtemple #GirirajSingh
    பாட்னா:

    பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    உலகத்தில் எந்த சக்தியாலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்த அவர், இந்தியாவில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் மதநம்பிக்கைக்கு மையப்புள்ளியாக இருக்கும் ஸ்ரீராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரம் நீர்த்துகொண்டே போவதால் தங்கள் நம்பிக்கையை இழந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து விட்டார்கள். ஆனால், இதற்கான வழி பிறக்கும் என்றும் குறிப்பிட்டார்.

    இதேபோல், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேசம் மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை பா.ஜ.க. முன்னரும் ஆதரித்தது. இப்போதும் ஆதரிக்கிறது. எப்போதும் ஆதரிக்கும்.

    அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படும். அதற்கான வேளைவந்து ராமர் கோவில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். #Ramtempleconstruction #AyodhyaRamtemple #GirirajSingh
    Next Story
    ×