என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
136 பயணிகளுடன் சென்ற இந்திய விமானம் தவறான ஓடுபாதையில் தரையிறங்கியதால் பதற்றம்
Byமாலை மலர்7 Sep 2018 1:13 PM GMT (Updated: 7 Sep 2018 1:13 PM GMT)
கேரளாவில் இருந்து மாலத்தீவுக்கு 136 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று மாலை தவறான ஓடுபாதையில் தரையிறங்கியதால் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. #AirIndiaflight #MaleAirport
மாலி:
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் A320 ரக விமானம் இன்று 136 பயணிகளுடன் மாலத்தீவு தலைநகரான மாலி நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
இன்று மாலை 4.42 மணியளவில் மாலி விமான நிலையத்தை நெருங்கியதும் கீழே இறங்கிய அந்த விமானம் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி, புதிதாக கட்டப்பட்டு வரும் வேறொரு கரடுமுரடான ஓடுபாதையில் இறங்கியது. இதனால், அந்த விமானத்தின் இரு டயர்கள் பஞ்சர் ஆனதை தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.
சம்பவ இடத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மாலி விமான நிலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தின் பழுதடைந்த டயர்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AirIndiaflight #MaleAirport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X