search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக வெள்ள நிலவரம் குறித்து உள்துறை மந்திரியிடம் பேசவுள்ளேன் - நிர்மலா சீதாராமன்
    X

    கர்நாடக வெள்ள நிலவரம் குறித்து உள்துறை மந்திரியிடம் பேசவுள்ளேன் - நிர்மலா சீதாராமன்

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை சீரமைக்க எம்.பி தொகுதி நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கோரவுள்ளேன்.

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள விரைவில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க உள்ளேன்.

    மேலும், குடகு மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    Next Story
    ×