search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்து 2 தொண்டர்கள் பலி
    X

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்து 2 தொண்டர்கள் பலி

    மேற்கு வங்காளத்தில் மார்கரம்பூர் கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இதில், இரு தொண்டர்கள் பலியாகினர். #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரசின் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மார்கரம்பூர் கட்சி  அலுவலகத்தில் இன்று காலை குண்டு வெடித்தது  இதில் கட்சி தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.இன்று காலை நடைபெறும் கூட்டத்திற்காக அலுவலக கதவை திறக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.  

    காயமடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×