search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி சுதந்திர தின உரை
    X

    செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி சுதந்திர தின உரை

    72-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார். #IndependenceDayIndia
    புதுடெல்லி :

    72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

    தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி, அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :- 

    நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு துறைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது கடமை.

    பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது.  

    பேரிடர் காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் நமது ராணுவ வீரர்கள் உள்ளனர். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் நீலகிரி மலையில் பூத்துள்ளன. அந்த நீல நிற குறிஞ்சிப்பூக்கள் மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரத்தை நியாபகபடுத்துகின்றன. எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் எனும் மகாகவி பாரதியின் கவிதையை தமிழில் வாசித்து மேற்கோள் காட்டி மோடி உரை. #IndependenceDayIndia
    Next Story
    ×