search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்
    X

    திருப்பதியில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். #SriLankanPM #RanilWickremesinghe #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே ஆகியோர் இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தனர். அங்கு, இலங்கை பிரதமரை ஆந்திர அரசு சார்பில் சுரங்கத்துறை அமைச்சர் சுஜயா கிருஷ்ணரங்காராவ், அதிகாரிகள் வரவேற்றனர்.

    பிறகு, திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். இரவு கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மனைவியுடன் தங்கினார். இதைதொடர்ந்து இன்று காலை 8.45 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை, இலங்கை பிரதமர் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.


    கோவில் கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தனர். பிறகு, ரங்கநாயகர் மண்டபத்தில் பிரதமர் ரணனில் விக்ரமசிங்கே மற்றும் அவரது மனைவியை அமர வைத்து லட்டு பிரசாதம், தீர்த்தம் மற்றும் ஏழுமலையானின் படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.

    திருப்பதியில் வழிபாடு செய்த பிறகு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மனைவியுடன் திருப்பதியில் இருந்து இலங்கைக்கு திரும்பினார். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலை மட்டுமின்றி வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. #SriLankanPM #RanilWickremesinghe #TirupatiTemple 
    Next Story
    ×