search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
    X

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.



    இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏகே பதக் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்பதால், நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    Next Story
    ×