search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கல்லூரியில் நடந்த பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்
    X

    கோவை கல்லூரியில் நடந்த பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

    கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. #CollegeStudentDies #NDMA
    புதுடெல்லி:

    கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆபத்து காலங்களில் கட்டிடங்களில் இருந்து குதித்து உயிர்தப்புவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

    இதற்காக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் பங்கேற்று, 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு இறந்துபோனார். மாணவியை மாடியில் இருந்து குதிப்பதற்கு தயார்படுத்திய பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.



    இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான பயிற்சி இன்றி மாணவிகளை வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

    பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளது.

    நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை’ என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari #CollegeStudentDies #NDMA

    Next Story
    ×