என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » coimbatore college student death
நீங்கள் தேடியது "Coimbatore College Student Death"
கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. #CollegeStudentDies #NDMA
புதுடெல்லி:
இதற்காக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது.
இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான பயிற்சி இன்றி மாணவிகளை வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளது.
நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை’ என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari #CollegeStudentDies #NDMA
கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆபத்து காலங்களில் கட்டிடங்களில் இருந்து குதித்து உயிர்தப்புவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் பங்கேற்று, 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு இறந்துபோனார். மாணவியை மாடியில் இருந்து குதிப்பதற்கு தயார்படுத்திய பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முறையான பயிற்சி இன்றி மாணவிகளை வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளது.
நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை’ என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari #CollegeStudentDies #NDMA
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X