search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராபிக் சிக்னலில் சரமாரியாக வாகனங்கள் மீது மோதிய கார் - 5 பேர் காயம்
    X

    டிராபிக் சிக்னலில் சரமாரியாக வாகனங்கள் மீது மோதிய கார் - 5 பேர் காயம்

    மும்பையில் டிராபிக் சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்ற கார் வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மும்பை:

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவியில் டிராபிக் சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது வேகமாக வந்த கார் ஒன்று வாகனங்கள் மீது மோதியது. இது முன்னாள் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் 2 பேர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிசிடிவி கேமரா பதிவை வைத்து கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவர் கார் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த பெண் காரிலிருந்து குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×