search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
    X

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #CBSEresults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10 வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவியர் எழுதினர்.

    இந்த ஆண்டு கேள்வித்தாள் லீக் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மறுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


    இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு முடிவுகள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதை தவிர பல இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBSEresults
    Next Story
    ×