search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு
    X

    மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறை கொண்டு வர குழு ஒன்றை அமைத்துள்ளார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. #Rajyasabha
    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது காவிரி பிரச்சினை, ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலங்களவையில் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    நாடாளுமன்ற விதியின்படி சபையை நடத்தவிடாமல் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டால் சபையை ஒத்திவைக்கதான் முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அமளியில் ஈடுபட்டு சபையை நடத்தவிடாமல் தடுக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்க துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ஒரு குழுவை அமைத்துள்ளார்.
    Next Story
    ×