search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் - மேல்முறையீட்டு மனுக்களை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
    X

    தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் - மேல்முறையீட்டு மனுக்களை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

    தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது. #TN #CooperativeSocietiesElection #SC
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில்,  கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள், அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TN #CooperativeSocietiesElection #SC

    Next Story
    ×