என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை பிறந்தநாள் - அம்பேத்கர் பிறப்பிடத்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Byமாலை மலர்13 April 2018 9:57 AM GMT (Updated: 13 April 2018 9:58 AM GMT)
அம்பேத்கரின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அம்பேத்கர் பிறந்த இடமான இந்தூர் அருகில் உள்ள மோவ் கிராமத்துக்கு செல்கிறார். #AmbedkarJayanthi #PresidentMhowVisit
புதுடெல்லி:
அம்பேத்கரின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அம்பேத்கர் பிறந்த இடமான இந்தூர் அருகில் உள்ள மோவ் கிராமத்துக்கு செல்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அம்பேத்கரின் பிறந்த ஊரான இந்தூரை சேர்ந்த மோவ் கிராமத்தில் அவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கின. அவரது பிறந்தநாளான நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மோவ் கிராமத்துக்கு சென்று அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #AmbedkarJayanthi #PresidentMhowVisit
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X