என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவன் கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர சந்திரபாபு நாயுடு மகன் முடிவு
Byமாலை மலர்21 March 2018 5:44 AM GMT (Updated: 21 March 2018 5:44 AM GMT)
எனது தந்தை சந்திரபாபு நாயுடு மற்றும் என் மீதும் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் பவன்கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் கூறினார்.
நகரி:
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது மகன் லோகேஷ் மந்திரியாக உள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் திடீரென்று முதல்வர் சந்திர பாபுநாயுடு, லோகேஷ் மீது ஊழல் புகார்கள் கூறினார்.
லோகேஷ் ஊழல்கள் செய்து சட்டசபை தேர்தலுக்காக பணம் சேர்க்கிறார். இதை அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் என்னிடம் கூறினார்கள். ஆந்திர மாநிலம் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்து சந்திர பாபுநாயுடு, தனக்கு எதிராக பவன்கல்யாணை மத்திய அரசு தூண்டி விடுவதாக கூறினார்.
இதற்கிடையே விஜயவாடாவில் மந்திரி லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சந்திரபாபு நாயுடு, என் மீது நடிகர் பவன்கல்யாண் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்வது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும். நடிகர் பவன் கல்யாண் கூறும் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் அதை பிரதமரிடம் கொடுங்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுங்கள். எங்களிடம் 4 ஆண்டுகள் இருந்த போது ஊழல்கள்பற்றி எதுவும் தெரியவில்லை. அரசியல் ஆதாயத்துக்கான பவன்கல்யாண் இப்படி பேசுகிறார். அவரை மோடி இயக்குகிறார். அவர் சொல்படி பவன்கல்யாண் ஆடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது மகன் லோகேஷ் மந்திரியாக உள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் திடீரென்று முதல்வர் சந்திர பாபுநாயுடு, லோகேஷ் மீது ஊழல் புகார்கள் கூறினார்.
லோகேஷ் ஊழல்கள் செய்து சட்டசபை தேர்தலுக்காக பணம் சேர்க்கிறார். இதை அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் என்னிடம் கூறினார்கள். ஆந்திர மாநிலம் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்து சந்திர பாபுநாயுடு, தனக்கு எதிராக பவன்கல்யாணை மத்திய அரசு தூண்டி விடுவதாக கூறினார்.
இதற்கிடையே விஜயவாடாவில் மந்திரி லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை சந்திரபாபு நாயுடு, என் மீது நடிகர் பவன்கல்யாண் பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்வது பற்றி கட்சி தலைமை முடிவு எடுக்கும். நடிகர் பவன் கல்யாண் கூறும் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் அதை பிரதமரிடம் கொடுங்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுங்கள். எங்களிடம் 4 ஆண்டுகள் இருந்த போது ஊழல்கள்பற்றி எதுவும் தெரியவில்லை. அரசியல் ஆதாயத்துக்கான பவன்கல்யாண் இப்படி பேசுகிறார். அவரை மோடி இயக்குகிறார். அவர் சொல்படி பவன்கல்யாண் ஆடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X