என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை
Byமாலை மலர்13 Jan 2018 6:54 AM GMT (Updated: 13 Jan 2018 6:54 AM GMT)
கர்நாடகா சட்டசபை தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதம் 28-ந் தேதி முடிகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதா கட்சிக்கு 44 இடங்களும், தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தன.
இந்த தடவையும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் தீவிர மாக உள்ளது. ஆனால் காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பதில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் எடி யூரப்பா பரிவர்த்தனை யாத்திரை என்ற பெயரில் தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவரும் யாத்திரைகளை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், சித்த ராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார். பிரசாரத்தை எந்தெந்த வகைகளில் முன்னெடுத்து செல்வது என்பது பற்றியும் அவர் விசாரித்தார்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி தனிநபராக போராடி காங்கிரசுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை தேடி கொடுத்தார். குஜராத்தில் அவர் இந்து கோவில்களுக்கு சென்றது வரவேற்பை பெற்றது. அதே பாணியை கர்நாடகாவிலும் பின்பற்றலாமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்படி கோவிலுக்கு செல்வதாக இருந்தால் கர்நாடகாவில் உள்ள எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார். அதற்கேற்ப தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை வடிவமைக்குமாறும் ராகுல் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் குஜராத்தில் ராகுல் தீவிர பிரசாரம் செய்தது போல கர்நாடகாவில் மிக தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டியது இல்லை என்று கூறி இருப்பதாக தெரிகிறது.
எனவே காங்கிரசுக்கு செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதிகளுக்கு ராகுல்காந்தியை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#tamilnews
கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதம் 28-ந் தேதி முடிகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதா கட்சிக்கு 44 இடங்களும், தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தன.
இந்த தடவையும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் தீவிர மாக உள்ளது. ஆனால் காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பதில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் எடி யூரப்பா பரிவர்த்தனை யாத்திரை என்ற பெயரில் தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவரும் யாத்திரைகளை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், சித்த ராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார். பிரசாரத்தை எந்தெந்த வகைகளில் முன்னெடுத்து செல்வது என்பது பற்றியும் அவர் விசாரித்தார்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி தனிநபராக போராடி காங்கிரசுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை தேடி கொடுத்தார். குஜராத்தில் அவர் இந்து கோவில்களுக்கு சென்றது வரவேற்பை பெற்றது. அதே பாணியை கர்நாடகாவிலும் பின்பற்றலாமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
அப்படி கோவிலுக்கு செல்வதாக இருந்தால் கர்நாடகாவில் உள்ள எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார். அதற்கேற்ப தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை வடிவமைக்குமாறும் ராகுல் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் குஜராத்தில் ராகுல் தீவிர பிரசாரம் செய்தது போல கர்நாடகாவில் மிக தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டியது இல்லை என்று கூறி இருப்பதாக தெரிகிறது.
எனவே காங்கிரசுக்கு செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதிகளுக்கு ராகுல்காந்தியை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X