என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1 கிலோ எடையிலான 639 ஆணிகளை விழுங்கிய அதிசய மனிதர்
Byமாலை மலர்31 Oct 2017 9:19 AM GMT (Updated: 31 Oct 2017 9:19 AM GMT)
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் பார்கனா மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் அருகிலுள்ள தனியார் நர்சிங் கோமில் எக்ஸ்ரே செய்து பார்த்த போது வயிற்றில் இரும்பு ஆணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவர் சின்சோபிரீனா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் சில காலமாக ஆணிகள் மற்றும் மணலை விழுங்கி உள்ளார். அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிகளை வெளியே எடுத்தோம்' என தெரிவித்தனர்.
அவர் வயிற்றில் இருந்த 1 கிலோ எடையிலுள்ள 639 ஆணிகள் அகற்றப்பட்டன. தற்சமயம் அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் பார்கனா மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் அருகிலுள்ள தனியார் நர்சிங் கோமில் எக்ஸ்ரே செய்து பார்த்த போது வயிற்றில் இரும்பு ஆணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவர் சின்சோபிரீனா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் சில காலமாக ஆணிகள் மற்றும் மணலை விழுங்கி உள்ளார். அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிகளை வெளியே எடுத்தோம்' என தெரிவித்தனர்.
அவர் வயிற்றில் இருந்த 1 கிலோ எடையிலுள்ள 639 ஆணிகள் அகற்றப்பட்டன. தற்சமயம் அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X