என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தின விழாவில் மாணவரிடையே மோடியை மகிமைப்படுத்துவதா? - மேற்கு வங்காளம் எதிர்ப்பு
Byமாலை மலர்13 Aug 2017 10:44 AM GMT (Updated: 13 Aug 2017 10:44 AM GMT)
சுதந்திர தின விழாவில் மாணவரிடையே பிரதமர் மோடியை மகிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு, மேற்கு வங்காள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி சமீபத்தில் ’புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அறிவித்திருந்தார். இதற்கிடையே, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில், புதிய இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடியின் கருத்தை, மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளிகளில் இந்தாண்டு நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலும், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்னும் சபதத்தை பதியவைக்கும் வகையிலும், மகிமைப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ’’மாணவர்களிடையே சுதந்திர போராட்டம் குறித்த தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளவே இதுபோன்ற போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் தனது மாநிலத்தில் மத்திய அரசின் முடிவை அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது எதிர்பாராதது. நாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மதசார்பில்லாதது. அரசியல் ரீதியானது அல்ல. இதுகுறித்து அவர்களிடம் பேசவுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X