என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிப்பு - துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் பிடிபட்டான்
Byமாலை மலர்28 April 2017 10:05 AM GMT (Updated: 28 April 2017 10:05 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் அந்த வங்கியில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, துப்பாக்கிகளுடன் வந்த இரு மர்ம நபர்கள் காசாளரை மிரட்டி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். கொள்ளையர்களும் திருப்பி சுட்டனர். இதனால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். வங்கிக்குள் கூச்சலும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
கொள்ளையர்களில் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஒருவனை மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் அந்த வங்கியில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, துப்பாக்கிகளுடன் வந்த இரு மர்ம நபர்கள் காசாளரை மிரட்டி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். கொள்ளையர்களும் திருப்பி சுட்டனர். இதனால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். வங்கிக்குள் கூச்சலும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
கொள்ளையர்களில் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஒருவனை மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வளைத்து பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X