என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி கல்லுக்குழியில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்6 Jun 2019 5:06 PM GMT (Updated: 6 Jun 2019 5:06 PM GMT)
திருச்சி கல்லுக்குழியில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி கல்லுக்குழி உலக நாதபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரபாகரன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் ஆட்டோ மொபல் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் திடீரென தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கண்டொன் மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். பிரபாகரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. கடன் பிரச்சினையா? குடும்ப பிரச்சினையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X