என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தகுதி தேர்வு- அரியலூர் மாவட்டத்தில் 9168 பேர் எழுதுகின்றனர்
Byமாலை மலர்4 Jun 2019 11:59 AM GMT (Updated: 4 Jun 2019 11:59 AM GMT)
அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை முதல் தாள் 2,097 பேர் 6 தேர்வு மையங்களிலும், 2-ம் தாள் 7,071 பேர் 12 தேர்வு மையங்களிலும் தேர்வை எழுத உள்ளனர்.
அரியலூர்:
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் 2-ம் தாள் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் சம்பந்தமான கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் பொற்கொடி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் வருகிற 8-ந் தேதியும், 2-ம் தாள் 9-ந் தேதியும் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 2,097 பேர், 6 தேர்வு மையங்களிலும், 2-ம் தாள் 7,071 பேர், 12 தேர்வு மையங்களிலும் தேர்வுவெழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசார் உட்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் செந்தில், பள்ளித்துறை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் 2-ம் தாள் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் சம்பந்தமான கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் பொற்கொடி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் வருகிற 8-ந் தேதியும், 2-ம் தாள் 9-ந் தேதியும் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 2,097 பேர், 6 தேர்வு மையங்களிலும், 2-ம் தாள் 7,071 பேர், 12 தேர்வு மையங்களிலும் தேர்வுவெழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசார் உட்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் செந்தில், பள்ளித்துறை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X