என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொட்டை மாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசியவர் தவறி விழுந்து பலி
Byமாலை மலர்22 May 2019 6:23 PM GMT (Updated: 22 May 2019 6:23 PM GMT)
வீட்டின் மொட்டை மாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசிய வாலிபர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.
மதுரை:
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 22). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தன்னுடைய நண்பர் கார்த்திக்ராஜா என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கார்த்திக்ராஜா வேலை தொடர்பாக வெளியூர் செல்ல இருந்தார். இதனால் அன்றைய தினம் மாலை அவரை, சரவணக்குமார் ஊருக்கு வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நண்பரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வீட்டின் மொட்டை மாடி தடுப்புச் சுவரில் அமர்ந்தபடி சரவணக்குமார் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது. அப்போது திடீரென்று அவர் நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 22). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தன்னுடைய நண்பர் கார்த்திக்ராஜா என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கார்த்திக்ராஜா வேலை தொடர்பாக வெளியூர் செல்ல இருந்தார். இதனால் அன்றைய தினம் மாலை அவரை, சரவணக்குமார் ஊருக்கு வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நண்பரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வீட்டின் மொட்டை மாடி தடுப்புச் சுவரில் அமர்ந்தபடி சரவணக்குமார் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது. அப்போது திடீரென்று அவர் நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X