search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் 3 நாட்களில் மலர் கண்காட்சியை 1 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்
    X

    ஊட்டியில் 3 நாட்களில் மலர் கண்காட்சியை 1 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்

    ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 1 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.

    நேற்று சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர். இன்னிசை கச்சேரியின்போது, பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மலர்களின் முன் நின்று போட்டோ எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர்.

    17-ந்தேதி 26 ஆயிரம் பேர்களும், 18-ந்தேதி 35 ஆயிரம் பேர் வருகை தந்தனர். நேற்று காலை முதலே, கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில், புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் கூடியிருந்தனர்.. நேற்று ஒருநாள் மட்டும் 44 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×