search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரி தற்கொலை
    X

    ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரி தற்கொலை

    சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம்,அண்ணா தெருவைச் சேர்ந்தவர் பாக்யநாதன் (வயது 65). சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்யநாதனின் கால் விரலை அகற்றியாக வேண்டும் என்று டாக்டர் கூறினார். இதனால் மனவேதனை அடைந்த பாக்யநாதன் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகில் உள்ள இடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×