என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தல்: டிரைவர்-கிளீனர் கைது
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை சின்னம்பேடுஅகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவாயலில் இருந்து சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் தவிடு மூட்டைகள் இருந்தன.
போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறினர். இதற்கு ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவரான ரெங்கா செங்கையா (வயது 38), கிளீனர் லட்சுமைய்யா (25) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும் லாரி டிரைவர் கிளீனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்,லாரியை போலீசார் திறந்து பார்த்தபோது தவிட்டு மூட்டைகளுக்கு இடையே ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மணல் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இதுபோல் பல ஆண்டு காலமாக சென்னைக்கு இவர்கள் மணல் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் லாரி டிரைவரையும், கிளீனரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
டிரைவர் மற்றும் கிளீனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்ததினார்கள். தலைமறைவான ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்