என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம்- மோட்டார் சைக்கிள் பறிப்பு: 3 பேர் கைது
Byமாலை மலர்6 May 2019 10:16 AM GMT (Updated: 6 May 2019 10:16 AM GMT)
அரியாங்குப்பத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:
அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அன்னை நகரை சேர்ந்தவர் தேவா (வயது22), ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவர் அரியாங்குப்பம் மார்க்கெட் தெருவில் மளிகை கடை அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தேவாவை சரமாரியாக தாக்கியது. மேலும் அவரிடம் இருந்த ரூ.200 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டது.
இதுகுறித்து தேவா அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், பெரியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவை ஆய்வு செய்து பார்க்கும் போது 3 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X