search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய லாரி உரிமையாளர்-டிரைவர் கைது
    X

    முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய லாரி உரிமையாளர்-டிரைவர் கைது

    முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணன் தலைமையில் போலீசார் கீழநம்மங்குறிச்சி பைபாஸ் சாலையில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

    அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் தம்பிக்கோட்டை கீழக்காடு பாமணி ஆற்றிலிருந்து முத்துப்பேட்டைக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் வடக்கு கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்கிருஷ்ணன் (22), லாரியின் உரிமையாளர் ரவிக்குமார் (34) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×