search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    கபிஸ்தலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

    கபிஸ்தலம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள தளிகையூர் குடியான தெருவில் வசிப்பவர் சிவானந்தம் மகள் வினோதா (வயது 19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி. ஏ. படித்து வருகிறார்.

    கடந்த 30-ந்தேதி கல்லூரிக்கு சென்ற வினோதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிவானந்தம் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வினோதாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×