என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது - வேலூர் டிஎஸ்பி பேச்சு
வேலூர்:
அரசியல் கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் காவலர் மன்றத்தில் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தெற்கு இன்ஸ்பெக்டர் அழகுராணி வரவேற்றார்.
கூட்டத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நகர் பகுதிகளில் டிஜிட்டல்பேனர் வைக்க அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே சுவரொட்டி போன்றவை ஒட்ட வேண்டும். ஊர்வலம் செல்ல வேண்டுமானால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்திலே கூட்டம் நடத்த வேண்டும்.
பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் அதிகப்படியான மக்களை ஏற்றி வரக்கூடாது என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே அதை கடைபிடிக்க வேண்டும். பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியினர் செய்யும் செலவுகள் கணக்கிடப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்களை நடத்த கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்