என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
முள்ளக்காடு:
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் பிளாஸ்டிக் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். கமிஷனர் ஜெயசீலன் உத்தரவின்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் சுகாதார அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் வடக்கு பகுதி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் தலைமையில் நடந்த சோதனையில் 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
தெற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ பிளாஸ்டிக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேற்கு பகுதி மாநகர சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமையில் நடந்த சோதனையில் 140 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் மாநகர கிழக்கு பகுதி சுகாதார அலுவலர் ராஜசேகர் தலைமையில் பூபாலராயர்புரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 115 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகர சுகாதார அலுவலர்களின் அதிரடி சோதனையால் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.
மாநகர தெற்கு பகுதியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் இதற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாநகர நான்கு மண்டலங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. #PlasticBan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்