search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
    X

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

    தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே கருவேலநாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகள் சுவேதா (வயது 15). இவர் முத்தையன்செட்டிபட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாததால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    அருகில் உள்ள கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற சுவேதா வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் சின்னமனூர் விஸ்வன் குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி லெட்சுமி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்கின்றனர்.

    தாய் வீராயி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற லெட்சுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான லெட்சுமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×