search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணம் அருகே கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல்- 3 பேர் கைது
    X

    மரக்காணம் அருகே கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல்- 3 பேர் கைது

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கானிமேடு, புதுப்பேட்டை கிராமங்கள். இங்கு ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 15-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அந்த கிராமங்களுக்கு சென்றனர்.

    பின்பு அங்கிருந்த பொதுமக்களை அரிவாள் மற்றும் தடிகளால் சரமாரியாக தாக்கினர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மரக்காணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சூனாமேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28), கானிமேடு பகுதியை சேர்ந்த கதிரவன் (27), மனோகரன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது கொலை மிரட்டல், வன்கொடுமை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×