search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் 28-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
    X

    பெரம்பலூரில் 28-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    இத்தகவலை கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×