search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் காதலை கண்டித்ததால் இலங்கை அகதி தற்கொலை
    X

    ஒட்டன்சத்திரத்தில் காதலை கண்டித்ததால் இலங்கை அகதி தற்கொலை

    ஒட்டன்சத்திரம் அருகே காதலை கண்டித்ததால் அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நிரோஷ் (வயது 27). இவர் தனது தாய் ஞானத்துடன் வசித்து வந்தார். ஞானம் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நிரோஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக தனது தாயாரிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிரோஷ் மது அருந்தி பின்னர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம் பட்டியைச் சேர்ந்த பொம்பிநாயக்கர் மனைவி வரதம்மாள் (வயது 75). இவர் நேற்று ஆடுகள் மேய்த்துக் கொண்டு இருந்த போது கால் தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×