என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரத்தில் காதலை கண்டித்ததால் இலங்கை அகதி தற்கொலை
Byமாலை மலர்22 Feb 2019 11:12 AM GMT (Updated: 22 Feb 2019 11:12 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே காதலை கண்டித்ததால் அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நிரோஷ் (வயது 27). இவர் தனது தாய் ஞானத்துடன் வசித்து வந்தார். ஞானம் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நிரோஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக தனது தாயாரிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிரோஷ் மது அருந்தி பின்னர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம் பட்டியைச் சேர்ந்த பொம்பிநாயக்கர் மனைவி வரதம்மாள் (வயது 75). இவர் நேற்று ஆடுகள் மேய்த்துக் கொண்டு இருந்த போது கால் தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நிரோஷ் (வயது 27). இவர் தனது தாய் ஞானத்துடன் வசித்து வந்தார். ஞானம் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நிரோஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக தனது தாயாரிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிரோஷ் மது அருந்தி பின்னர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம் பட்டியைச் சேர்ந்த பொம்பிநாயக்கர் மனைவி வரதம்மாள் (வயது 75). இவர் நேற்று ஆடுகள் மேய்த்துக் கொண்டு இருந்த போது கால் தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X