search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே குடிபோதையில் தகராறு- தொழிலாளி கொலை
    X

    விழுப்புரம் அருகே குடிபோதையில் தகராறு- தொழிலாளி கொலை

    விழுப்புரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் புதிய காலனியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 60). இவர் விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கணேசன் (42). என்பவருக்கு சொந்தமாக எருமணம்தாங்கலில் உள்ள நிலத்தில் குடிசை அமைத்து அங்கேயே தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

    சாமிக்கண்ணுவின் நண்பர் கார்த்திகேயன் (35). இவரும் விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அங்குள்ள விவசாய நிலத்தில் வைத்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது கார்த்திகேயனின் செல்போனை சாமிக்கண்ணு பறித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அருகில் கிடந்த கம்பை எடுத்து சாமிக்கண்ணுவின் நெற்றியில் குத்தினார்.

    இதில் ரத்தம் வழிந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையறிந்ததும் கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பிணமாக கிடந்த சாமிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×