search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலி
    X

    முத்துப்பேட்டை அருகே கார் மோதி விவசாயி பலி

    முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது பாமினி ஆற்று பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×