என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே விவசாயி திடீர் மாயம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்17 Feb 2019 11:30 AM GMT (Updated: 17 Feb 2019 11:30 AM GMT)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த விவசாயி திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப் பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 51). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வரதராஜன் திடீரென மாயமானார். அவரது வீட்டின் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் படிந்திருந்தது. இன்று காலை இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, டி.எஸ்.பி.ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது வரதராஜன் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப் பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 51). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வரதராஜன் திடீரென மாயமானார். அவரது வீட்டின் தரை மற்றும் சுவர்களில் ரத்தம் படிந்திருந்தது. இன்று காலை இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, டி.எஸ்.பி.ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது வரதராஜன் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X