என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கம்பம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொள்ளை
Byமாலை மலர்13 Feb 2019 2:36 PM GMT (Updated: 13 Feb 2019 2:36 PM GMT)
கம்பம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
கம்பம் எல்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்ஜாபர். இவர் அதேபகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலையில் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர்.
நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் அலுவலக கதவை உடைத்து அங்கே இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம், சி.சி.டி.வி.கேமிரா, ஹார்டுடிஸ்க் ஆகிய பொருட்களை திருடிச்சென்றனர்.
மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தபோது பணம் மற்றும் பொருட்கள் கொள்ளைபோனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X