search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் கணவர், குழந்தை இறந்த வேதனையில் பெண் தற்கொலை
    X

    திருபுவனையில் கணவர், குழந்தை இறந்த வேதனையில் பெண் தற்கொலை

    திருபுவனை அருகே கணவரும், குழந்தையும் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    மதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பூவரசங் குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது பேத்தி அம்சவள்ளி (வயது 26). திருபுவனை தனியார் கம்பெனி ஊழியர்.

    இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் மற்றும் குழந்தை இறந்து விட்டதால் கோவிந்தம்மாளும், அம்ச வள்ளியும் திருபுவனையில் தங்கினர்.

    அம்சவள்ளி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். கணவரும், குழந்தையும் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்சவள்ளி நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதை பார்த்த கோவிந் தம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்சவள்ளியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அம்சவள்ளி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

    இதுகுறித்து கோவிந் தம்மாள் திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×